சங்க யோகம்
5,6 க்கு அதிபதி இனைந்து ஒரே வீட்டில் இருபினும் அல்லது ஒருவருக்கொருவர் 7 ஆம் பார்வையால் பார்த்து கொண்டாலும் சங்க யோகம் உண்டாகிறது. பலன் உயர் கல்வி, நீண்ட ஆயுள், நிலையான புகழ், மக்கள் மத்தியில் சாதனை செய்பவராகவும் உள்ளார்.
5,6 க்கு அதிபதி இனைந்து ஒரே வீட்டில் இருபினும் அல்லது ஒருவருக்கொருவர் 7 ஆம் பார்வையால் பார்த்து கொண்டாலும் சங்க யோகம் உண்டாகிறது. பலன் உயர் கல்வி, நீண்ட ஆயுள், நிலையான புகழ், மக்கள் மத்தியில் சாதனை செய்பவராகவும் உள்ளார்.
குரு, சுக்ரன், புதன் லக்னத்திற்கு கேந்திரத்தில் (4,7,10) ல் அல்லது திரிகோணத்திலோ (1,5,9) இருப்பின் சரஸ்வதி யோகம் உண்டாகிறது. பலன் மற்றவர்களால் மதிக்கத்தக்க பலன் உண்டாகும். கூர்மையான அறிவு, எழுத்தாற்றல், பேச்சாற்றல் முதலியன உண்டாகும். அமைச்சர்கள் போன்று உயர்ந்த பதவிகளை…
3, 6, 11 க்கு உடையவர்கள் பலம் பெற்று காணப்படின் வசுமதி யோகம் உண்டாகின்றது. பலன் செல்வம், செல்வாக்கு, நீண்ட புகழ் யாவும் உண்டாகிறது.
லக்னாதிபதி, சனி, குரு ஆகியோர் பலமுடன் அமையப் பெறின் விரின்சி யோகம் உண்டாகிறது. பலன் வல்லமை, வலிமை, நீண்ட புகழ் யாவும் உடையவராக விளங்குகின்றனர்.
சூரியனுக்கு 2 புறமும் சுப கிரகங்கள் அமையப் பெறின் ரவி யோகம் உண்டாகிறது. பலன் இந்த யோகம் உடையவர்கள் புகழ், பெருமை, நல்ல பதவி அமையப் பெறுகிறார்கள். சாதனைகள் படைக்கிறார்கள்.
லக்னம் சரமாக அமையப் பெற்று 5,10 க்கு உடையவர்கள் பலமாக கேந்திரத்தில் 4,7,10 ல் அமையப்பெறின் கனக யோகம் உண்டாகிறது. பலன் இந்த யோகம் உடையவர் நிலைத்த புகழ், செல்வம், செல்வாக்கு அமையப் பெறுகிறார்கள்.
ஜாதகத்தில் குரு, சுக்ரன், புதன் ஆட்சி உச்சம் பெற்று காணப்படின் சக்ரவார்த்தி யோகம் உண்டாகிறது. பலன் மக்கள் மத்தியில் புகழ் பெறுகிறார்கள். நாட்டை ஆளும் யோகம் உண்டாகிறது.
லக்னத்திற்கு 4,7,10 ல் சூரியன், புதன் மற்றும் சுக்ரன் இணைந்து காணப்படின் ஸ்ரீநாத யோகம் உண்டாகிறது. பலன் செல்வம் செல்வாக்கு புகழ், அந்தஸ்து உடையவர்களாக விளங்குகின்றனர். சிலர் சந்நியாசி போன்ற வாழ்க்கை நடத்துகின்றனர்.
லக்னத்தில் 12 ல் கேது அமையப் பெற்றவர்கள் முக்தி யோகம் பெறுகிறார்கள். பலன் இறந்த பிறகு மீண்டும் பிறவி ஏற்படுவதில்லை. இருக்கும் காலத்தில் சந்நியாசி வாழ்கையில் நாட்டம் ஏற்படுகின்றது. பக்தி மார்கத்தில் ஈடுபாடு மிக்கவர்களாக உள்ளனர்.
லக்னாதிபதி 11 ல்அமர்ந்து சந்திரனுக்கு சுபர் பார்வை அமையப் பெற்றால் புஷ்கல யோகம் உண்டாகிறது. பலன் மற்றவர்களிடம் அன்புடன் பழகுவார்கள், மற்றவர்களால் மதிக்கப் பெற்று நிலைத்த புகழ் பெறுகிறார்கள்.